31 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.
                - சேக்கிழார் (12-4-3)

 

பொருள்: கங்கையாற்றை  தாங்கிய சிவபெருமானுக்கு மெய் யடிமை செய்தற்குக் உரியவராகவும்  , உள்ளத்தில் அருள் நிறைந்தவராகவும்  , திருநீற்றினை அணிந்ததாயும் உள்ள திருவுடம் பினையுடைய அடியவர்கள், தம் திருவுள்ளத்தில் உளங்கொள்ளும் செயல்களையெல்லாம் அவர் திருவுள்ளம் நிறையுமாறு ஆற்றி, மாறு படுதல் இல்லாத ஒழுக்க நெறியில் நிலைபெற்று விளங்கும் இல்லறத்தை நடத்துகின்ற இன்பத்தால் வந்த பெரும்பேறெல்லாம் அவ்வடியவர்கள் அதனை விரும்பிச் செய்து வருகின்ற காலத்தில்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...