27 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
                            - திருமூலர் (10-1-3)

 

பொருள்: அயன், அரி, உருத்திரன்  என்ற  ஏனை மூவரையும்  படைக்குமாற்றால் உள்ள  மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்;  தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்: தன்னை, "அப்பா / அம்மா " என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் அம்மையாயும் இருக்கின்றான்.பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய எம் சிவபெருமானேயாகும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...