10 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
                  - திருநாவுக்கரசர் (4-13-6)

 

பொருள்: நீருமாய்  நெருப்புமாய்  செல்வமுமாய்  செல்லும் வழியாய்  ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பல திருநாமங்கள்  உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் தீர்க்கும் பெருமானே,    அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...