07 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
  
                  - திருஞானசம்பந்தர் (1-15-2)

எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுபவர்கள்  பழி பாவம் தீரும் என்பது திண்ணம். ஆரவாரத்துடன் வரும் அலைகள், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுவதால்  பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...