18 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
 
           - சேக்கிழார் (12-3-42)

 

பொருள்: சிற்றம்பலத்தில்  ஆனந்தக் கூத்தாடி, அடியவர்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளியவரும் , தேவர்கட்குத் தலைவரும் ஆன சிவபெருமானும், ஐவகை புலன்களை  வென்றதனால் சிறப்படைந்தவர்களே! நம்மிடத்தில்  அன்போடு இருவரும் எந்நாளும் இவ்விளமை நீங்காமல் இருந்து வாழ்வீர்களாக என்று அருளி மறைந்தார். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...