30 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே
                                                           - சிவபெருமான் (11-1-1)

குறிப்பு:  இத்திருமுகப்பாசுரம் சிவபெருமானால் இயற்றப்பட்டது எனும் சிறப்புடையது.

29 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
                                             - திருமூலர் (10-9-8.2)

28 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
                                                       - திருமாளிகைத்தேவர் (9-1-1)

27 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
                                                         - மாணிக்கவாசகர்  (8-திருச்சதகம்-19)
 

26 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.          - சுந்தரர் (7-1-1)

குறிப்பு : இறைவன் சுந்தரரை தடுத்து ஆட்கொண்டபோது பாடிய முதல் பாடல் இது.

24 September 2012

தினம் ஒரு திருமுறை


          திருவதிகைவிரட்டணம் 
 
          கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
     கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
   பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
   குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
     வீரட்டா னத்துறை அம்மானே   - திருநாவக்கரசர்  (4-1-1)
 
குறிப்பு: திருநாவக்கரசர் சூலை  நோய் தீர பாடி பயன் பெற்ற திருப்பதிகம் இது.
 

21 September 2012

தகவல் பலகை

ஏகாதேசி :  10ம் தேதி, புதன், புரட்டாசி  மாதம் (26-9-2012)

பிரதோசம் : 11ம்  தேதி , வியாழன் , புரட்டாசி  மாதம் (27-9-2012)

முழுமதி மலைவலம் (பௌர்ணமி கிரிவலம்): 13ம் தேதி, சனி, புரட்டாசி மாதம் (29-9-2012) (காலை 8.03மணி முதல் மறு நாள் காலை 8.48 வரை)

சதுர்த்தி : 17ம் தேதி, புதன், புரட்டாசி மாதம் (3-10-2012)

சட்டி : 20ம் தேதி, சனி, புரட்டாசி மாதம் (6-10-12)

கார்த்திகை: 18ம் தேதி, வியாழன் , புரட்டாசி மாதம் (4-10-2012)

ஏகாதேசி :  25ம் தேதி, வியாழன், புரட்டாசி  மாதம் (11-10-2012)

பிரதோசம்: 27ம் தேதி, சனி, புரட்டாசி மாதம் (13-10-2012)

மறைமதி (அமாவாசை ): 29ம் தேதி, திங்கள், புரட்டாசி மாதம் (15-10-2012)

ஐப்பசி (மாதப்பிறப்பு ) : 1ம் தேதி, புதன் (17-10-2012)

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே

                                                                                            -    திருஞானசம்பந்தர் (1-1-1)

குறிப்பு: திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து அருளிய முதல் பாடல் இது. 

13 September 2012

வணக்கம்

தங்கள் வருகைக்கு நன்றி.

சைவ சமயம் பற்றி தெரிந்துகொள்ள தலைப்புக்களை சொடுக்கவும். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் சைவம் தொடர்பான சந்தேகங்களையும் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

நன்றி.