31 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.?
    - திருமாளிகைத்தேவர் (9-1-11)

30 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே
                                - மாணிக்கவாசகர் (8-5-79)

29 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மத்த யானை ஏறி மன்னர்
   சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
   என்ப தடைவோமே.
          - சுந்தரர் (7-7-1)

26 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ
      - திருநாவுக்கரசர் (4-9-1,2,3)

25 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே
                     - திருஞானசம்பந்தர் (1-11-1)

23 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை
                         - சேக்கிழார் (12-1-11)

22 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே
       - காரைக்கால் அம்மையார் (11-2-9)
 

20 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
            - திருமந்திரம் (10-20)

19 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்
தொண்டனேன் கருதுமா கருதே
              - திருமாளிகைத்தேவர் (9-1-3)

18 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி
               - மாணிக்கவாசகர் (8-5-66)

17 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
    பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
   அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
   மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
   வேலை சூழ்வெண் காட னீரே.
                 - சுந்தரர் (7-6-1)

16 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
                               - திருநாவுக்கரசர் (4-7-1)

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே
                             - திருஞானசம்பந்தர் (1-10-1)

12 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊன டைந்த உடம்பின் பிறவியே
தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாந டம்செய் வரதர்பொற் றாள்தொழ.
                            - சேக்கிழார் (12-1-2)

11 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே
         - காரைக்கால்அம்மையார்  (11-2-1)

10 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே
                                              - திருமூலர் (10-1-1)

09 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும்
தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே
                   - திருமாளிகைத்தேவர் (9-1-2)
 

08 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே
                                                                       - மாணிக்கவாசகர் (8-5-16)

06 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
   கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
   ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
   ஓண காந்தன் றளியு ளீரே
                             - சுந்தரர் (7-5-1)

03 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

         மாதர்ப் பிறைக்கண்ணி யானை
               மலையான் மகளொடும் பாடிப்
         போதொடு நீர்சுமந் தேத்திப்
     புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்
     ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
     களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
     கண்டறி யாதன கண்டேன்


                                - திருநாவுக்கரசர் (4.3.1)

குறிப்பு: கைலாயக்காட்சியை வேண்டி நாவக்கரசர் கைலாயம் நோக்கி சென்றபொழுது இறைவன் அவரை சோதித்து அங்குள்ள குளத்தில் முழ்கி எழுமாறு பணித்தார். அவ்வாறே  நாவக்கரசர் அங்கே முழ்கி திருவையாறில் எழுந்தார். இறைவன் கைலாயக்காட்சியை அங்கே காட்டியபொழுது பாடிய பாடல் இது.




02 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
                                                 - திருஞானசம்பந்தர் (1-23-1)


குறிப்பு: திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்றாளம் வழங்கிய திருப்பதி இது.

01 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
                                             - சேக்கிழார் (12-1-1)

குறிப்பு: இறைவன் "உலகெலாம்" என்று அடி எடுத்து கொடுத்த பெருமை உடையது.