17 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

         - காரைக்காலம்மையார் (11-4-1)

பொருள்: நன்கு மொழிப்பயின்று, தெளிந்து உன் திருப்பாதமே சேர்ந்தேன். அழகு மிகுந்த கருமையான கண்டத்தை உடைய பெருமானே என்று என்னுடய
இடர் தீரும்? 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...