19 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
                           - திருஞானசம்பந்தர் (1-15-11)

 

பொருள்: தண்ணீர்  சூழ்ந்த சிறந்தக் காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நிலத்தில் புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய  பயன்கள் பலவற்றைத்தரும் பாடல்களாகிய இவற்றைக் பலகாலும் பாடவல்லவர் சிவகதியைச் சேர்வர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...