24 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே.
 
              - மாணிக்கவாசகர் (8-6-7)

 

பொருள்: மிடற்றில் நஞ்சுண்டதால் கருமையையுடையவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனி உடையவனே  ! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை துன்பத்தை நீக்குபவனே,  பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி,  என் சிறுமையை மறைத்த உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...