14 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
 
               - திருமூலர் (10-1-2)

 

பொருள்: சிவபெருமானைத் தவிர அமரர்  பிறர் இல்லை, அவனை உணராது செய்யும் தவம்  பயன்தருவதில்லை,  அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடத்தமுடியாது,. அவனது அருளின்றி முத்திக்கு பெறுவதற்கு வழி இல்லை.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...