06 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.

           - சேக்கிழார் (12-3-9)

பொருள்: இளமை காலம் முதலே  திருநீலகண்டரும் அவர் மனைவியாரும்ஒருங்கு ஏற்று நின்ற அளவில்லாத சீர்மை மிகுந்த திருவாணையைப் போற்றி ஒழுகினர், ஆண்டுகள் பலவும் சென்றன. வளம் மிக்க இளமைப் பருவம் நீங்கி,   மூப்புப் பருவம் வந்து மிகவும் தளர்ந்த  பொழுதும், தாம் இது காறும் சிவபெருமானிடத்து வைத்த அன்பினின்றும் நீங்காராயினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...