11 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.
 
              - சுந்தரர் (7-10-10)

 

பொருள்: வீடுப்பேறு (முத்தி) பெறுதற்பொருட்டுப் பல்லூழி காலமாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும் , அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் , பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று , அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவியில்  வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய ,  திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலைப் பாடும்பொழுது ,   நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார்   சிவபிரானது இடத்தை அடைவார்கள் 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...