03 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
மலர்முகம் கலந்ததென் கருத்தே.

             - திருமாளிகைத்தேவர் (9-2-9)

பொருள்: திருமால், இந்திரன்,பிரமன் ஏனைய தேவர்கள் எல்லோரும்  உன்னைத் தரிசிக்க வரும் போது உள் வாயில் காவலில் உள்ள தடையால் நெருக்கவே, அவர்களுடைய கிரீடங்கள் ஒன்றோடொன்று மோது வதால் பெயர்ந்து கீழே விழும் இரத்தினங்கள் வாயிலின் முன்னிடத் தில் ஒளிவீசும் பெரும்பற்றப் புலியூரின் சிற்றம்பலத்தில், பெரிய மேருமலையாகிய வில்லாலே திரிபுரத்தையும் தீக்கு இரை யாக்கிய கூத்தனே! பெரிய குழைகளை அணிந்த காதுகளை உடைய களங்க மற்ற செந்தாமரை மலர் போன்ற உன் திருமுகம் என் எண்ணத்தில் கலந்துவிட்டது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...