1. காணாபதியம் என்றால் என்ன?
கணபதியை முழுமுதல் கடவுளாக வணங்கும் சமயம் காணாபதியம்.
2. கணபதிக்கு வழங்கும் வேறு சில பெயர்கள் யாவை?
பாலகணகதி,தருணகணபதி,வீரகணபதி,சக்திகணபதி,நிருத்தகணபதி,ஏரம்பகணபதி என பல பெயர்கள் உள்ளன.
3. கணபதியின் தத்துவம் என்ன?
கணபதியை ஒங்காரத்தின் வடிவம் எனக் கருதுவர்.இவர் நாதவிந்து தத்துவத்தின் நிலை கலன்.
4. கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள் யார்?
ஔவையார்,நம்பியாண்டார்நம்பி முதலியோர் .கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள்.
![]() |
நம்பியாண்டார்நம்பி |
![]() |
ஔவையார் |
5. கணபதியின் கருணைக்கு உதாரணம் கூறு?
கணபதியின் கருணையால் நம்பியாண்டார் நம்பி திருமுறைகள் இருக்கும் இடத்தை அறிந்து வெளிக் கொண்டுவர முடிந்தது.
6. கணபதியை பற்றிய நூல்கள் யாவை ?
விநாயகர் அகவல் , மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை , மூத்தபிள்ளையார, மும்மணிக்கோவை ,விநாயகர் கவசம் , விநாயகர்நான்மணிமாலை , திருநாரையூர் விநாயகர் திருவீரட்ட மணிமாலை போன்ற பல நூல்கள் உள்ளன.
திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தங் கை.
தொகுக்க உதவிய நூல்கள் : விநாயகர் கலைக்களஞ்சியம் , முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment