20 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய்
எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
 
                   - திருநாவுக்கரசர் (4-13-7)

 

பொருள்: கண்ணாகவும் மணியாகவும் ,  கருத்தாகவும், எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் ,  விண்ணாகவும்  , வானத்தில் இயங்கிய முக் கோட்டைகளை  அழித்த மறையவனாகவும்  , அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...