21 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையொர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!
 
           - சுந்தரர் (7-11-1)

 

பொருள்: திருமால், பிரமன் ஆகிய கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும்,  உமையம்மையை தமது திருமேனியில் ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும்  இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்ற  தலம் இதுவே !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...