26 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

திருநீ றிடாஉருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

                 - திருமாளிகைத்தேவர் (9-3-10)
 
பொருள்: திருநீற்றை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து, திருநீறு அணியாத உருவத்தைத் தீண்டேன் என்று சொல்லிப் நீலகண்டனாகிய சிவபெருமானுடைய பண்பு செயல் இவை பற்றிய செய்திகளை  சொல்லிக் கொண்டு தெருவிலே திரிகிறாள். பருவமழையால் பெருகு கின்ற நீர் இழியும் அருவிகளை உடைய மகேந்திரமாகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருவே! குணக்குன்றே! என்று குலாத்தில்லை அம்பலக் கூத்தனுடைய நினைப்பிலே, சிவபெருமானுடைய உருவெளித் தோற்றத்தைக் கண்டு அழைக்கிறாள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...