04 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

            - திருமூலர் (10-1-1)

பொருள்: தேவர்  ஒருவரும் சிவனோடு ஒப்பவர்  இல்லை; இப்பூவுலகில் அவனொடு ஒப்பவராவார் இல்லை; உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் விளங்கும் முழு முதற்கடவுள் அச்சிவ பெருமானேயாகும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...