28 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாளும் நன்னிலந் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.
 
              - சுந்தரர் (7-12-8)

 

பொருள்: நன்னிலம் , பனையூர் , கஞ்சனூர் , நீண்ட சடையையுடைன்  நெல்லிக்காவில்  , நெடுங்களம் ,  மிக , நஞ்சணிந்த கண்டத்துடன் கடைமுடி என்ற ஊரிலும்   , கண்டியூர் , வேளா நாட்டில் உள்ள வேளூர் , விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர்  என்ற ஊரிலும் ,  இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...