19 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்
றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ
மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அன்னையொப் பாய்எனக் கத்தன்ஒப் பாய்என்
அரும்பொருளே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-16)

 

பொருள்: என்னை அப்பா! பயப்படாதே! என்று ஆற்றுவாரிலாமல் நின்று இளைத்துத் திரிந்தேன், உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய், உனக்கு நீயே நிகர் , நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்குத் தாயை ஒப்பாய், தந்தையை ஒப்பாய். எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளேயாவாய், ஆகையால் என்னை விட்டுவிடு வாயோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...