13 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.

       - இளையான்குடிமாற நாயனார் புராணம் (1)

 

பொருள்: பொன் வேயப்பெற்ற திருஅம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் பெருமானின் திருவடிகளை எந்நாளும் தமது நெஞ்சத்தில் வைத்து  வழிபாடாற்றி வருபவர். அப்பெருமானுக் குரிய அடிமைத் தன்மையில் சிறந்து விளங்கும் தகுதிப்பாட்டால் மேன்மை அடைந்தவர். உயர்ந்த வேளாண் குலம் செய்த தவத்தால், அக்குலத்தில் தோன்றி, இந்நிலவுல கில் தம் புகழை விளங்கச் செய்த பெருமையினார், அவர் இளையான் குடிப்பதியில் தோன்றியவர். மாறன் என்னும் பெயருடையார் என்பதாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...