07 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துணுக்கென அயனும் மாலும்
தொடர்வருஞ் சுடராய் இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.
 
          - திருமாளிகைத்தேவர் (9-4-4)

 

பொருள்: பிரமனும் திருமாலும் தொடர்ந்து வந்து அறிவதற்கு அரிய ஒளிவடிவினனாய், உலகில்  தன்னை அணுகியிருக்கும் அடியவர்களுக்குத் தானும் அணியனாய்ச் செம் பொன்மயமான அம்பலத்தில் ஆடுகின்ற எம்பெருமானுக்கு அன்பர் அல்லாத அழுகை உடையவரையும், பிறரைத் துன்புறுத்தும் குருட்டுத் தன்மையை உடைய அறிவிலிகளையும், கீழ்மக்களாகிய வாய் அழுக்கை உடைய மாறுபடப் பேசுபவர்களையும் என்கண்கள் காணா. அப்பேயரோடு என் வாய் பேசாது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...