18 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ்
சிராப்பள்ளி
பாங்கூ ரெங்கள் பிரானுறை
யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி
பயிலும்ஊர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை
யூர்நாட்டு நறையூரே.
 
              - சுந்தரர் (7-12-4)

 

பொருள்: தேங்கூர் , சிற்றம்பலம் , சிராப்பள்ளி , அழகு மிக்க கடம்பந்துறை ,  எப்பொருட்கும் மேலானவனும் , எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவன்  நாங்கூர் ,  நறையூர்  என்பவை ஆம் எம் இறை நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள் ஆகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...