04 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே

                - திருநாவுக்கரசர் (1-15-1)

பொருள்: பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன், பாசூரில் உறையும் பவளம், தில்லை சிற்றம்பலத்தில் உள்ள கனி போன்றவன் , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம், திருவெற்றியூரில் விரிந்த ஒளி, தூயவர்கள் தலைவன், கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக வைத்தேன். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...