21 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
 
              - திருமூலர் (10-1-8)

 

பொருள்: மால், அயன்  முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை கண்டு அளந்து  தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட எங்கள் சிவபிரான் எல்லாவற்றையும்  உள்அடக்கி  கடந்து நிற்கின்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...