15 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே.
 
                   - திருநாவுக்கரசர் (4-15-4)

 

பொருள்: திருப்புறம்பயத்தில் உள்ள முத்து , திருப்புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் கதிரவன்  , அருவிகள் ஒலிக்கும் திருக்கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் என்றும் செய்யப்படுகின்ற திருவதிகை வீரட்டத்தானில்  உள்ள சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...