14 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே.
 
        - திருஞானசம்பந்தர் (1-17-11)

 

பொருள்: கொடிகள் கட்டிய பெரிய  மாடங்களோடு உடைய  குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து உறையும்  அந்தணர்கள் வாழும் காழிப்பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, எல்லா வினைகளும்  நீங்கும்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...