22 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று

         - காரைக்காலம்மையார் (11-4-10)

பொருள்:  ஈசனை நான் என்றும் என்  மனத்தில் இனியவனாக வைத்தேன் . அவனை என் தலைவனாக கொண்டுள்ள எனக்கு அரிய காரியம் என்று ஒன்றும் இல்லை. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...