25 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு
வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
 
           - சேக்கிழார் (இளையான்குடிமாற நாயனார் புராணம் - 3)

 

பொருள்: எலும்பு மாலைகளை  அணிந்த சிவபெருமா னுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப்  வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மை யான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லுவார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...