06 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
மதுவெள்ளமே.
 
           - மாணிக்கவாசகர் (8-6-13)

 

பொருள்: கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டின் கண்ணே நிலைபெறுகின்ற, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...