01 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே.
           - மாணிக்கவாசகர் (8-6-19)

 

பொருள்:  கொடிய என் வினை காட்டினை அழியும்படி உனது அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே! திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே ! கொடிய யானையை  உரித்து உமையம்மையை அஞ்சுவித்தவனே!என்னை விட்டுவிடுவாயோ? எனது பிறவி யாகிய மரத்தை வேரொடும் களைந்து ஆட் கொண்டருள்வாயாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...