11 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
 
               -திருநாவுக்கரசர்  (4-15-10)

 

பொருள்: புத்தூரில் உறையும் புனிதன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை ,  விதையாகி மிழலையில்  முளைத்தவன் , வேள்விக்குடியில் உள்ள  எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக வைத்தேன்  .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...