08 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குன்றம்மது வெடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தானின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
 
           - திருஞானசம்பந்தர் (1-18-11)

 

பொருள்:  இராவணனின் உடல் தோளும்   நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் வாழும்  தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த  நலம் குன்றாத இந்த திருப்பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் நிறையும் புகழே.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...