12 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேணி நாடத னிற்றிரி
யும்பெரு மான்றனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை யப்பன்வன்
றொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.
 
         - சுந்தரர் (7-12-11)

 

பொருள்: நாடுகளில் விரும்பித் திரியும் பெருமானும் , அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை , நாணுடையவளாகிய ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையும் , இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் பாடித் துதிப்பவர் சிவலோகத்தை அடையலாம். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...