25 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

           - திருநாவுக்கரசர் (4-16-1)

பொருள்: சடை உடையபெருமான்  வெண்ணீறு அணிந்தவராய், கரிய மான் குட்டி துள்ளும் கையினராய், ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய், உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய், அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...