19 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
 
            - திருமூலர் (10-1-10)

 

பொருள்: அயனும் , மாலும் ஓரு  எல்லையளவில் பெருநிலை உடையவராயினும், அனைவரினும் மேம்பட்டவன்   சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் கடந்து  நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...