21 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
 
            - இளையான்குடிமாற நாயனார் புராணம் (8)

 

இளையான்குடிமாற நாயனாரின் செல்வம் படிப்படியாக குறைந்து கொண்டிரும்பொழுது , மாலான பன்றியும் அயனான அன்னமும் தாம் காணச் சென்ற அடியையும், முடியையும் அறிய இயலாதவராகிய சிவ பெருமான், ஆனேற்றை ஊர்தியாகக் கொள்ளாமலும், உமையம்மை யாரை ஒரு மருங்கில் கொள்ளாமலும், ஒரு நற்றவ வேடமுடைய அடியார் வேடத்தைக் கொண்டு இவ்வுலகம் உய்யும் பொருட்டு எழுந் தருளினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...