05 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
 
                  - திருமூலர் (10-1-9)

 

பொருள்: சிவபெருமானது நிலையை  ஒருவராலும் அளத்தற்கரிது என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணாது  அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...