13 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.
 
                 - மாணிக்கவாசகர் (8-6-22)

 

பொருள்: ஒளியாயானவனே ! திருவெண்ணீற்றை நிறையப் பூசி  மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடி யார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு தொலைவில்  இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பழமையானவனே! பெண்ணாய், ஆணாய் , அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...