09 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
 
               - திருமூலர் (10-1-4)

 

பொருள்: நெருப்பினும் வெம்மை உடையன்;  நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது  தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையவன்,  நீண்ட சடையை உடையவனாகிய நம் சிவபெருமான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...