28 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இணங்கிலா ஈசன் நேசத்
திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய்
பேசாதப் பேய்க ளோடே.
          - திருமாளிகைத்தேவர் (9-4-1)

பொருள்: தனக்கு ஒப்பு  இல்லாத சிவபெருமானிடத்தில் அன்போடு நிலைத்திருக்கும் மனத்தை உடைய அடியேனைப் பொறுத்த வகையில், பல திருவிழாக்களைக் கொண்ட சிறப்பினை உடைய தில்லையில் உகந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய கூட்டத்தைப் உடைய  அடியார்களுடைய வள்ளன்மைக் குணங்களைப் புகழ்ந்து கூறாத, பெருமை இல்லாத வாயை உடைய, ஒன்பான் ஓட்டைகளை உடைய உடம்பைச் சுமக்கும், செத்தாரில் வைத்து எண்ணப் படுபவர்களை அடியேனுடைய கண்கள் காணமாட்டா. உலகத்தார் உண்டு என்பதனை இல்லை என்னும் அப்பேய்களோடு என்னுடைய  வாய் பேசாது .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...