22 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி யாடத்தவ மாமே.
                - திருஞானசம்பந்தர் (1-16-11)

             

 

பொருள்: தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியாக கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்த, தண்மையான நீரைக்கொணர்ந்துதரும் காவிரித்தென்கரையில் விளங்கும் திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில்(ஆலந்துறைக் கோயிலில்) உறையும் இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப்பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப்பரவசமாய் ஆடத் தவம் (எண்ணியது )கைகூடும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...