07 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே.
 
              - மாணிக்கவாசகர் (8-6-9)
பொருள்: மூன்று உலகங்களுக்கும், ஒப் பற்ற தலைவனே ! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே ! போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவின தாகிய சூலத்தை உடையவனே ! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளே  அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே! விட்டுவிடுவாயோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...