தினம் ஒரு திருமுறை
பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.
- திருநாவுக்கரசர் (4-14-1)
பொருள்: மேரு மலையைச் சுற்றிக் கயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து தேவர்கள் ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்த அந்நஞ்சு எங்கும் பரவ , "பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு அருளிச்செய்வாயாக " என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட சிவபெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .
No comments:
Post a Comment