03 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.
 
                 - திருநாவுக்கரசர் (4-14-1)

 

பொருள்: மேரு மலையைச் சுற்றிக் கயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து  தேவர்கள்  ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்த  அந்நஞ்சு எங்கும் பரவ , "பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு அருளிச்செய்வாயாக "  என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட சிவபெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...