08 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேறாக உள்ளத் துவகைவிளைத்
தவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்
எனையும் மகிழ்ந்தாள வல்லாய் என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்துன்
அடியார் பிழைபொறுப்பாய் அமுதோர்
கூறாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

              - திருமாளிகைத்தேவர் (9-3-12)

பொருள்:  உருவெளித் தோற்றத்தில் கண்டு மற்றவர்களினும் வேறுபட்ட வகையில் சிறப்பாக என் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்கி,  மறைகள்  ஓதுதலால் எய்தும் சிறப்பு உடைய தில்லை மூவாயிரவர் அந்தணரோடு அடியேனையும் மகிழ்ச்சியாக ஆட்கொள்ள வல்ல வனே! ஆறுகள் தோன்றும்  மகேந்திர மலையில் இருந்து, உன் அடியவர்களின் பிழைகளைப் பொறுத்து அருளுகின்ற வனே! பெண்ணமுதாகிய பார்வதியை உன் திருமேனியின் ஒரு பாக மாக உடையவனே! குணக்குன்றே குலாத்தில்லைக் கூத்தனே 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...