04 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாவுறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.
 
               - சுந்தரர் (7-11-10)

 

பொருள்: மிகஅழகினால் பொலிகின்ற, திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில், மிகவிருப்பம்  கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை, நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர், தம் பாவத்தை அறுப்பவராவர்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...