23 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே.
              - திருநாவுக்கரசர் (1-14-10)

 

பொருள்: தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய , வழிபாடு நிறைவுசெய்ய  தன் கண் ஒன்றை ஈந்து  அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை, எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து , தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து , சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான் . அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...