31 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவளர் சிறப்பின் மிக்க
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
 
       - சேக்கிழார் (12-4-34)

 

பொருள்: வீடுபேற்றினை அடைதற்குக் காரணமான சிறப்பு மிக்க இயற்பகை நாயனாருக்கும், தெய்வக் கற்பினையுடைய அவர் மனைவியாருக்கும்  அருளில் திளைத்து வாழ்தற்குரிய உயர்ந்த வீடு பேற்றினைக் கொடுத்து, இவ்வருட்டிறத்தினைத் தேவர்களும் எண்ணி ஏத்துமாறு உமையம் மையாரோடு ஆனேற்றில் எழுந்தருளி வந்தவராய சிவபெருமான், நிலை பெற்ற அழகிய தில்லைப் பொதுவிற்கு எழுந்தருளினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...