11 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இன்று நீரெனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீ ருரைத்தது
ஒன்றை நான்செயு மத்தனை யல்லால்
உரிமை வேறுள தோவெனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.

             - சேக்கிழார் (12-4-9)

 

பொருள்: இன்று  நீர் அடியேனுக்கு அருளியது இவ் வாறாயின், என்னுடைய உயிர்க்குத் ஒருத்துணையாகிய முதல்வரே! நீங்கள்  கூறிய கட்டளை ஒன்றை நான் செயதலேயன்றி, அடியேனுக்கு வேறு உரிமை உண்டோ?`` என்று கூறித் தம் பெரு மைக்குரிய கணவனாரை வணங்க, இயற்பகையாரும் தாழ்ந்து அவரை வணங்கி நிற்ப, அங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமா னாகிய மறையவரிடம் சென்று, அவர் திருவடிகளை வணங்கித் திருமகளினும் சிறந்த பெருமையினையுடைய அவ்வம்மையார் திகைப்புடன் நின்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...